Wednesday 30 September 2015

அன்று...இன்று...நன்று

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 4. புதுக்கவிதை
******************************************************

அன்று...இன்று...நன்று....

ஆடைகள் நமக்கு அரணாகும்
பெரிய கூட்டங்களுக்கு
சாதாரண ஆடை அணிய முடியாது அன்று
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அரையாடையே
முழு ஆடை ஆனது இன்று.

கிழிந்த ஆடை என்றால்
மதிப்பில்லை அன்று
ஆங்காங்கே
கிழித்துப் போட்டால் நன்று இன்று

தமிழ் பேசினால் கைதட்டி
முதல்வர் பதவி
கொடுத்தது அன்று
தமிழ் பேசினால்
கை கொட்டி சிரித்து
கேவலப்படுத்துது இன்று

தமிழுக்காக தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்தது அன்று
தமிழ் வராது, என்று சொல்வது
நாகரீகம் இன்று

ஏதேனும் ஒரு படிப்பு படித்தால்
வேலை கிடைக்கும் அன்று
என்ன படித்தாலும்
வேலை கிடைக்காது இன்று

உழுதுண்டு வாழ்வாரை
பின் செல்வார் அன்று
உழுதோர் எல்லாம்
அழுதோர் ஆனார் இன்று

வீடுகளில் கொல்லைப்புறத்தில்
தோட்டம் இருக்கும் அன்று
கொல்லைபுறமின்றி
வீடுகள் கட்டி வாடகைக்கு விடும் இன்று

ஊரே சொந்தம் தான் அன்று
அதனால் தான் சொந்த
ஊர் எது என்று கேட்டார் அன்று
சொந்தமே இல்லாமல் பிணங்கள்
தான் நடக்குது இன்று

ஊருணி, குளம் என
நீர்நிலைகள் அன்று
அக்வாபினா போன்ற
நீர் நிலையங்கள் தான் இன்று

மூச்சு இருந்தால் தான்
உயிர் உண்டு உணர்வாய்
என்றும்
மூச்சு இருக்கும் போதே
திருந்திடுவாய் மனிதா
நன்று

***************************************************

2 comments:

  1. சூர்யாவின் சொல்கேட்டு
    திருந்தட்டும்
    மனிதரினம்
    அருமை
    வாழ்த்துக்கள் சூர்யா
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. sirpiyai pool thamil enum uli kondu puthu kavithai enum silayaii sethekeyamaiku vaalthukal.

    ReplyDelete